நாகை மாவட்டம், திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்த அபூர்வம் (80) வெள்ளிக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், திருவெண்காடு அம்பேத்கர் அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், முருகன், கலைச்செல்வன் ஆகியோர் செய்தனர்.