சிதம்பரம் அரசு நந்தனார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஹேமலதா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத் துறை நிதி கமிட்டி மாநில உறுப்பினர் தில்லைசீனு பங்கேற்று மாணவிகளின் மேம்பாடு, பெண் கல்வியின் அவசியம் குறித்து கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர்.