கடலூர் மாவட்டத்தில் மதுக் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.9.88 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் மது கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 106 வாகனங்களை ஏலம் விட்டு அரசுக்கு சொத்தாக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ரா.வேதரத்தினம் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில் 89 வாகனங்கள் ஏலம் போயின.
இதில், இரு சக்கர வாகனங்கள்-78 , மூன்று சக்கர வாகனங்கள்-9, நான்கு சக்கர வாகனங்கள்-2 ஆகியவை ஏலம் போயின. இதன் மூலமாக ரூ.9.88 லட்சம் அரசுக்கு வருவாயாக ஈட்டப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
கலால் உதவி ஆணையர் வெங்கடேசன், அரசு தானியங்கி பணிமனை செயற்பொறியாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.