போதைத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

சிதம்பரத்தில் கோட்ட கலால் துறை சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரத்தில் கோட்ட கலால் துறை சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி 
மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பேரணியை, பள்ளி வளாகத்தில்
 சிதம்பரம் உதவி ஆட்சியர் விசுமகாஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். கோட்ட கலால் அலுவலர் ஜி.செல்வக்குமார், தலைமை ஆசிரியர் கே.செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் கே.குமார், வருவாய்த் துறை 
முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆர்.செல்வம் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com