திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெண் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியை ரமாமணி தலைமை வகித்து, விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தார். மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்று பெண் சிசுக்கொலையை தடுத்தல், பெண்கல்வி, பெண் குழந்தையை பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பிக்கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.