வரதராஜப் பெருமாள் கோயிலில் நாளை திருக்கல்யாணம்

கடலூர் திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 


கடலூர் திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் வருகிற 14-ஆம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீகோதைநாச்சியார் சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி, தக்கார் கு.சுபத்ரா, எழுத்தர் வி.ஆழ்வார் ஆகியோர் செய்துள்ளனர். இந்த நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com