சிதம்பரம் குருவைய்யர் தெருவில் உள்ள ஓரியண்டல் பள்ளியில் திருக்குறள் 3-ஆம் ஆண்டு முற்றோதல் நிகழ்ச்சி வருகிற 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு ஆடிட்டர் கே.வைத்தியநாதன் தலைமை வகிக்கிறார். தில்லை தமிழ்ச் சங்கத் தலைவர் ஆடிட்டர் பா.நடராஜன் முன்னிலை வகிக்கிறார். பள்ளித் தாளாளர் ஜா.ராகவன் வரவேற்கிறார். விழாவில் பேராசிரியர் தி.பொன்னம்பலம், ஜோதிமணி பழநி அம்மையாருக்கு திருக்குறள் இசைத் திலகம் விருதை வழங்குகிறார். பேராசிரியர் ஏ.வி.ரங்காச்சாரியார் வாழ்த்துரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் மருத்துவர் சுவாமி செல்வமுத்துக்குமரன், பேராசிரியர் அரு.ராமநாதன், ராம.முத்துகுமரேசன், ஆதி.சிவராமவீரப்பன், கவிஞர் சு.மோகன், ஜோதிமணி பழநி ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.