தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
 குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பேட்டை காலனியில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்தில் சாமிக்கண்ணு, வெள்ளிக்கண்ணு, பழக்கான் ஆகியோரது குடிசை வீடுகள் சேதமடைந்தன. வீடுகளை இழந்தவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் கடலூர் மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் பங்கேற்று, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, காய்கறிகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் ச.ம.குரு செய்திருந்தார். நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் மோகன்தாஸ், ராஜா, குறிஞ்சிப்பாடி நகரச் செயலர் பாலமுருகன், ஒன்றியச் செயலர் கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு விசிக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com