அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி சாவு

பண்ருட்டி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தும், மொபெட்டும் மோதிக்கொண்டதில் விவசாயி உயிரிழந்தார்.

பண்ருட்டி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தும், மொபெட்டும் மோதிக்கொண்டதில் விவசாயி உயிரிழந்தார்.
பண்ருட்டி வட்டம், சின்னபுறங்கனி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகண்டன் (32). இவரது தந்தை ராஜேந்திரன் (55), விவசாயி. இவர் தனது மொபெட்டில் புதன்கிழமை பண்ருட்டியில் இருந்து சின்ன புறங்கனிக்கு புறப்பட்டுச் சென்றார். 
பணிக்கன்குப்பம் அருகே சென்ற போது, கும்பகோணத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், மொபெட்டும் மோதிக் கொண்டன. 
இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸார் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனால், சென்னை-கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. 
இதுகுறித்து சிவகண்டன் அளித்த புகாரின் போரில், காடாம்புலியூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com