கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பழைய மருத்துவமனை சாலையைச் சேர்ந்த வீராசாமி (80), தெற்கு வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (74) ஆகியோர் திங்கள்கிழமை காலமானார்கள்.
இவர்களது இரு ஜோடி கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்க நிர்வாகிகள் ஜவகர் நாராயணசாமி, பூவராகமூர்த்தி, கார்த்திகேயன், குமார் ஆகியோர் செய்திருந்தனர்.