திட்டக்குடி அருகே கோயிலில் இருந்த பாட்டுப்பாடும் மின் சாதனக் கருவியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திட்டக்குடி அடுத்துள்ள வாகையூர் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைக்க முயற்சித்தனர். ஆனால், உண்டியலை உடைக்க முடியாததால் அங்கிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பாட்டுப்பாடும் மின்சாதனக் கருவியை திருடிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.