விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நகரம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
கடலூர் நகரச் செயலர் மு.செந்தில் தலைமையில் வில்வ நகரில் நடைபெற்ற இந்த சமத்துவப் பொங்கல் விழாவில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் வில்வ நகர் கிராமத் தலைவர் ஆறுமுகம், கோவிந்தசாமி, கஸ்டம்ஸ் சங்கர், பிச்சமுத்து, அசோக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி மாநில துணைச் செயலர் செல்வ புஷ்பலதா, மாநில துணைச் செயலர் பெ.பாவாணன், மாநில ஒருங்கிணைப்பாளர் பா.பிரதீப், வழக்குரைஞரணி மாநில துணைச் செயலர்கள் ஜ.சுபாஷ், மு.சரிதா, மாநில நிர்வாகிகள் அண்ணாதுரை, அ.சரண், ஜெகன், கடலூர் தொகுதிச் செயலர் அறிவுடைநம்பி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கட்சியினர் திரளாக பங்கேற்று புதுப் பானைகளில் பொங்கலிட்டு கொண்டாடினர்.