சிதம்பரம் வட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சங்கக் கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் ரா.மகாலிங்கம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் எஸ்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சங்கச் செயலர் த.பரமசிவம் கூட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். கலைச்செல்வன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.