வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பண்ருட்டி, திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயிலில் தை மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பண்ருட்டி, திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயிலில் தை மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு இந்தக் கோயிலில் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சிவன், அம்பாள், நந்திதேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நந்தி தேவர் வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். 
தொடர்ந்து அவருக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com