இளமையாக்கினார் கோயிலில் ஜன. 28,29-இல் வரலாற்று உத்ஸவம்

சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினார் கோயில் என்ற யௌவனாம்பாள் சமேத யௌவனேஸ்வரர் கோயிலில், திருத்தல


சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினார் கோயில் என்ற யௌவனாம்பாள் சமேத யௌவனேஸ்வரர் கோயிலில், திருத்தல வரலாற்று உத்ஸவம், திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா வருகிற 28, 29 -ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.
திருத்தல வரலாற்று உத்ஸவத்தை முன்னிட்டு 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு சுவாமி வீதிஉலா, திருவோடு கொடுத்தல், புராணம் வாசித்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
29-ஆம் தேதி சுவாமி வீதிஉலா வந்த பின்னர் கோயில் தீர்த்தக் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கிய வரலாற்று நிகழ்வு நடைபெறுகிறது. இரவில் யௌவனாம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் காரைக்குடி பெரி.மெ.ப.பழனியப்ப செட்டியார் தலைமை
யிலான குழுவினர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com