திருவதிகை மாடவீதியில் பக்தர்கள் வலம் செல்ல உகந்த நேரம்

பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் தை மாதம் பெளர்ணமியன்று (ஞாயிற்றுக்கிழமை)


பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் தை மாதம் பெளர்ணமியன்று (ஞாயிற்றுக்கிழமை) மாட வீதியில் பக்தர்கள் வலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்தது. 
அதன்படி, மாலை 6 மணி முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரலாம். இரவு 7 மணி முதல் 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இரவு 11 மணிமுதல் 12 மணிவரை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com