சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு கட்டுக்கரை தெருவைச் சேர்ந்த டி.ராஜாமணி (63) வியாழக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத் தலைவர் மணிமாறன், தில்லை, மணிமாறன், சண்முகம் ஆகியோர் செய்தனர்.