குடியரசு தின விழாவை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதர்களால் தேசியக் கொடி சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
முன்னதாக, வெள்ளித் தாம்பாளத்தில் தேசியக்கொடி வைக்கப்பட்டு, ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர், மேள தாளங்களுடன் தேசியக்கொடி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, கிழக்கு கோபுரத்தில் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.