செம்மேடு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பண்ருட்டி வட்டம், செம்மேடு கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி வட்டம், செம்மேடு கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 23-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் அனுக்ஞை, கணபதி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, நவக்கிரஹ பூஜைகளும், மாலை 6 மணியளவில் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், அங்குரார்ப்பணம், முதற்கால பூஜை ஆகியவையும் நடைபெற்றன.
 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 2-ஆம் கால பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனையும், மாலை 6 மணியளவில் 3-ஆம் கால பூஜை, தமிழ்வேத திருமுறை பாராயணம், யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 4-ஆம் கால பூஜை, நாடிசந்தானம், மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு நடைபெற்றது.
 தொடர்ந்து காலை 7.30 மணியளவில் அய்யனார் கோயிலிலும், 8 மணியளவில் பிடாரி அம்மன் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 காலை 9.45 மணியளவில் முத்துமாரியம்மன் கோயில் விமானம் (படம்), முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com