குறிஞ்சிப்பாடியில் கழிவுநீர் கால்வாயிலிருந்து ஆண் குழந்தை சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி சின்னக்கடைத் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், பிறந்து சுமார் ஆறு மாதங்களே ஆன ஆண் குழந்தை சடலம் கிடப்பதாக அந்தப் பகுதியினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து, விசாரணை நடத்தி
வருகின்றனர்.