குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி ஒன்றியம், அகரநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி ஒன்றியம், அகரநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, கிராம வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் விஜயரகுநாத், முன்னாள் ஒன்றிய துணைக்குழு தலைவர் கோவி.ராசாங்கம், ஊராட்சி செயலர் இளங்கோ, ராமமூர்த்தி, கண்ணன், சொக்கநாதன், மணி, சரவணன், ராஜேந்திரன், ஜெயமணி, ஊராட்சி செயலர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 பண்ருட்டி: குடியரசு தினத்தை முன்னிட்டு, பண்ருட்டி ஒன்றியம், லட்சுமிநாராயணபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பண்ருட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் உதவியாளர் தேன்மொழி தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் ராஜ்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம், நிதி செலவினம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com