நெய்வேலியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கடலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமை வகித்துப் பேசினார். மாவட்டப் பொருளாளர் துரை.மருதமுத்து, ஒன்றியச் செயலர் ஜோதிபாசு, அமைப்பாளர் அசுரன், அன்பரசன், ஒன்றிய துணைச் செயலர் வ.சி.பாலு, சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், என்எல்சி நிறுவனம் 3-ஆவது சுரங்கம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நெய்வேலியில் திங்கள்கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ள கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, ஆர்ப்பாட்டத்துக்கு பொதுமக்களை திரட்டுவது என தீர்மானித்தனர்.