கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கடலூர் மேற்கு மாவட்டச் செயலரும், திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி.வெ.கணேசன் தலைமை வகித்தார். தலைமை தேர்தல் பணிக்குழு தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எல்.கணேசன் கலந்து கொண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் குறித்து சிறப்புரையாற்றினார். பின்பு, மொழிப்போர் தியாகி கீழப்பாழூர் சின்னசாமி குடும்பத்துக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது (படம்).