ஆம் ஆத்மி நிர்வாகிகள் கூட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை, புதிய பொறுப்பாளர்கள் நியமனக் கூட்டம் இந்திரா நகரில் அண்மையில் நடைபெற்றது.

ஆம் ஆத்மி கட்சியின் நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை, புதிய பொறுப்பாளர்கள் நியமனக் கூட்டம் இந்திரா நகரில் அண்மையில் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.ஜீவானந்தம் தலைமை வகித்தார். நெய்வேலி சட்டப் பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளர் அ.தேவகுமார் முன்னிலை வகித்தார்.
 மாவட்டச் செயலர் வி.விவேகானந்தன், சமூக ஆர்வலர் குணசேகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். துணைச் செயலர் ஆர்.சந்திரசேகரன், மருத்துவர் சுவிதா கந்தன், இளைஞரணி செயலர் எஸ்.மகேந்திரன், வடக்குத்து ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் கெவின் ரூத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நெய்வேலி தாகுதியில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றினர். ஊழலற்ற ஆட்சி அமைப்பதென உறுதியேற்றனர்.
 கூட்டத்தில், நெய்வேலி சட்டப் பேரவை தொகுதிச் செயலராக ஆர்.சந்திரசேகரன், துணைச் செயலர்களாக எஸ்.மணிகண்டன், கோபாலகிருஷ்ணன், இளைஞரணி செயலராக இ.பார்த்தசாரதி, வடக்குத்து ஊராட்சி ஒருங்கிணைப்பாளராக கெவின் ரூத்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி(வடக்கு) துணைச் செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com