கடலூர் கிழக்கு மாவட்டம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியச் செயலர் என்.ஜெய்பிரகாஷ் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜெ.சிவா வரவேற்றார். கட்சியின் அமைப்புச் செயலரும், அறந்தாங்கி எம்எல்ஏவுமான இ.ஏ.ரத்தினசபாபதி, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலரும், விருத்தாசலம் எம்எல்ஏவுமான வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றி, நலிந்தோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
அமைப்புச் செயலர் பி.வாசுதேவன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் சோழன் எம்.எஸ்.சம்சுதீன், எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலர் கே.மகேஷ் ஆகியோர் பேசினர்.
மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பேரூர் கழகச் செயலர்கள் குறிஞ்சிப்பாடி எஸ்.பழனிவேல், வடலூர் வி.பாக்கியராசு நன்றி கூறினர்.