கடலூர் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் நடைபெறுவதாக இருந்த மனுநீதி நாள் முகாம் ஒத்தி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை (ஜன.30) நடைபெறுவதாக இருந்த மனுநீதி நாள் முகாம் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த முகாம் பிப்.7-ஆம் தேதி நடைபெறும். இதில், அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.