டி.எஸ்.பி. அலுவலகம் இடமாற்றம்

சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 இந்த அலுவலகம், சீர்காழி சாலையில் சபாநாயகர் தெருவில், காவலர் குடியிருப்பு வளாகத்தில் இயங்கி வந்தது. தற்போது, சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில், கட்டப்பட்டுள்ள போக்குவரத்துக் காவல் நிலைய புதிய கட்டடத்தின் மாடியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், புதிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என டி.எஸ்.பி. ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com