சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தலைமை நிர்வாக அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் மு.ரவிச்சந்திரன் பங்கேற்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
தொடர்ந்து, பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினர், மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன், பல்வேறு துறை புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.