லாரி மோதி இளைஞர் சாவு

திட்டக்குடி அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

திட்டக்குடி அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
 கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள கீழச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் வெற்றிவேல் (24). பெற்றோரை இழந்த இவர், தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். சென்னையில் கோயம்பேட்டில் வேலை பார்த்து வந்தவர், பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்தாராம்.
 இந்த நிலையில், புதன்கிழமை மாலை அதே பகுதியில் நடந்து சென்ற போது, சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி அவர் மீது மோதியதாம். இந்த விபத்தில் வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com