சிதம்பரம் அருகே உள்ள தென்பாதி கிராமத்தைச் சேர்ந்த ஏ.நாராயணசாமி (72) ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், பாஸ்கரன், சேத்தியாத்தோப்பு அரிமா சங்க நிர்வாகிகள் செய்தனர்.