காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடுஞ்சேரியில் கேலக்ஸி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சாசனத் தலைவர் எழில்முருகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆளுநர் (தேர்வு) பாலாஜி, மண்டல துணை ஆளுநர் சாமிசெழியன் ஆகியோர் பங்கேற்று பேசினர். சங்கத்தின் புதிய தலைவராக கோவிந்தராசு, செயலராக நாகராஜன், பொருளாளராக கலைச்செல்வன் ஆகியோர் பதவியேற்றனர். சங்க நிர்வாகிகள் அருள்பிரகாசம், சோழன்பாபு, ரூபிபாஸ்கர், சாகுல்அமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.