புதிய மின் மாற்றி இயக்கிவைப்பு

சிதம்பரம் தெற்குரத வீதியில் புதிய மின்மாற்றியை மின் வாரியச் செயற்பொறியாளர் இயக்கி வைத்தார்.

சிதம்பரம் தெற்குரத வீதியில் புதிய மின்மாற்றியை மின் வாரியச் செயற்பொறியாளர் இயக்கி வைத்தார்.
 இந்த வீதியில் 60-க்கு மேற்பட்ட வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. சிதம்பரம் துணை மின் நிலையத்திலிருந்து இந்தப் பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. மின் அழுத்தக் குறைபாடு பிரச்னை காரணமாக தெற்குரத வீதியில் ரூ.2.50 லட்சத்தில் புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டது. இதனை சிதம்பரம் மின் வாரியச் செயற்பொறியாளர் ஆர். ஜெயந்தி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் அசோக் பிரசன்னா, உதவி மின் பொறியாளர் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com