பேருந்து மோதியதில் மீனவர் பலி

கடலூரில் பேருந்து மோதியதில் மீனவர் உயிரிழந்தார்.

கடலூரில் பேருந்து மோதியதில் மீனவர் உயிரிழந்தார்.
கடலூர் மாலுமியார்பேட்டை திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (34). மீன்பிடித் தொழிலாளி. இவர், வியாழக்கிழமை இரவு கடலூர் முதுநகர் அருகே சிதம்பரம் சாலையில் சுத்துக்குளம் திருப்பம் அருகே நின்றுகொண்டிருந்தார்.  
அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில், முத்துக்குமரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com