சிஐஎஸ்எப் வீரர் மரணம்

நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சிகிச்சை பெற வந்த சிஐஎஸ்எப் வீரர் உயிரிழந்தார்.

நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சிகிச்சை பெற வந்த சிஐஎஸ்எப் வீரர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சிவகிரிபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் வீரமலை (56), என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தொழிலகப் பாதுகாப்புப் படையில் துணை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தவர், பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வீரமலை இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com