பெருமாள் கோயிலில் திருபவித்ரோத்ஸவம்

பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள சரநாராயணப் பெருமாள் கோயிலில் திருபவித்ரோத்ஸவம் சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது. 

பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள சரநாராயணப் பெருமாள் கோயிலில் திருபவித்ரோத்ஸவம் சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது. 
சனிக்கிழமை காலை 9 மணியளவில் பகவத் பிரார்த்தனை, வாஸ்து சாந்தி ஹோமம், வேத திவ்ய பிரபந்தம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் மிருத்ஸங்கிரணம், அங்குரார்ப்பணம், அக்னி ஆராதனம், பஞ்சகவ்ய பிரதிஷ்டை, பவித்ர ஸயனாத்வாசம், இரவு 9 மணிக்கு பூர்ணாஹுதி, வேத பிரபந்த சாற்றுமுறை ஆகியவை நடைபெற்றன. 
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் புண்யாவாசனம், அக்னி ஆராதனம்,  நித்ய ஹோமம், காலை 9 மணிக்கு உத்ஸவர் திருமஞ்சனம், 10.30 மணிக்கு பெருமாள், தாயார், ஸயன நரஸிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றுதலும், நண்பகல் 12 மணிக்கு பூர்ணாஹுதி, வேத பிரபந்த சாற்றுமுறையும், மாலை 5.30 மணிக்கு உற்சவர் உபயநாச்சியாருடன் உள்புறப்பாடும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், இரவு 8.30 மணிக்கு பூர்ணாஹுதி, வேத பிரபந்த சாற்றுமுறை ஆகியவை நடைபெற்றன. 
விழாவின், மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு புண்யாவாசனம், அக்னி ஆராதனம், நித்ய ஹோமம், காலை 9 மணிக்கு 108 கலச திருமஞ்சனம் மற்றும் திருக்குளத்தில் தீர்த்தவாரி, பகல் 11.30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, வேதபிரபந்த சாற்றுமுறை, மாலை 6.30 மணிக்கு உத்ஸவர் உபயநாச்சியாருடன் உள்புறப்பாடு ஆகியவை  நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com