சாலை விபத்தில் இளைஞர் பலி 

பாலத் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

பாலத் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
 விருத்தாசலம் கோபாலபுரத்தைச் சேர்ந்த ர.காண்டீபன் மகன் அருள்முருகன் (28). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் சூ.கீரனூர் பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்புக் கட்டை மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அருள்முருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com