நீதிமன்றத்தில் பணி வாய்ப்பு

கடலூர் மாவட்ட நீதித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக முதன்மை மாவட்ட நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தெரிவித்தார். 

கடலூர் மாவட்ட நீதித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக முதன்மை மாவட்ட நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தெரிவித்தார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
கடலூர் மாவட்ட நீதித் துறையில், தமிழ்நாடு நீதித் துறை அமைச்சுப் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
காலிப் பணியிடங்களின் விவரம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பதாரர்களின் அடிப்படை கல்வித் தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விவரம், தேர்வு முறை, மற்றும் விண்ணப்பப் படிவம் போன்ற விவரங்கள் https://districts.ecourts.gov.in/cuddalore என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 
விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் இந்த இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 25-ஆம் தேதியாகும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com