சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், திருமூலர் பதஞ்சலி யோகா சிகிச்சை மையம் ஆகியவை இணைந்து அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சியை திங்கள்கிழமை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சென்ட்ரல் சங்கத் தலைவர் எம்.தீபக்குமார் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஹேமலதா வரவேற்றார். ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகாவின் சிறப்புகள் குறித்து தமிழரசன் எடுத்துரைத்தார்
. யோகா குறித்த கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில் அளித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.