கடலூர் எம்.பி. நன்றி அறிவிப்பு

போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் எம்.பி. பண்ருட்டி நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் எம்.பி. பண்ருட்டி நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தட்டாஞ்சாவடி காளி கோயிலில் இருந்து கட்சியினருடன்  ஊர்வலமாக புறப்பட்ட அவர் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு பண்ருட்டி நகரச் செயலர் ராஜேந்திரன், மாவட்டச் செயலர் கணேசன் தலைமை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலர்கள் தணிகைசெல்வம், ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
வழக்குரைஞர்கள் பக்கிரி, பரணிசந்தர், முன்னாள் கவுன்சிலர் சிவா, நகரப் பொருளாளர் ராமலிங்கம், தொண்டரணி கதிர்காமன், இளைஞரணி சம்பத் உள்ளிட்டோர் 
கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com