தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் தடுப்புத் துறை சார்பில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்க பாஷ்யம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஏ.ரூபியாள்ராணி தலைமை வகித்தார். வீனஸ் கல்லிக் குழும பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் ஜி.மகேஷ்சுந்தர் வரவேற்றார்.
முகாமில், தீ விபத்து தடுப்பு, தீயை அணைப்பது உள்ளிட்டவை குறித்து தீயணைப்பு நிலையத்தினர் செயல் விளக்கம் அளித்தனர்.