அரசுப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் ரூ.4.25 கோடியில்

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் ரூ.4.25 கோடியில் 33 வகுப்பறைகளுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழாவில், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். 
விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிதி ஒடுக்கீடு பரிந்துரை கமிட்டி உறுப்பினர் தில்லைசீனு, வேளாண் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவர் டேங்க் ஆர்.சண்முகம், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக செயற்பொறியாளர் ஏ.மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் காதர்பாஷா, அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com