வடலூரில் கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்றவர் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தார்.
வடலூர், பார்வதிபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த கணேசன் மகன் சின்னபிள்ளை (50). இவரது மனைவி மீனாட்சி(30). இவர்கள் வீட்டில் வளர்த்த பூனை புதன்கிழமை மாலை அந்தப் பகுதியில் உல்ள கிணற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து, பூனையை காப்பாற்ற சின்னபிள்ளை கயிறு மூலம் கிணற்றில் இறங்கியபோது கைப்பிடி தளர்ந்து கீழே விழுந்தார். அப்போது, தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சின்னபிள்ளை சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி மீனாட்சி அளித்த புகாரின்பேரில் வடலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.