உளுந்தூர்பேட்டை அருகே வியாழக்கிழமை இரவு மொபெட் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் காயமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊ.கீரனூர் காலனியைச் சேர்ந்த நடேசன் மகன் மொன்னையன்(50). இவர், தனது மனைவி கொளஞ்சியம்மாள்(48), உறவினர் கடலூர் மாவட்டம், பட்டாம்பாக்கம் அருகேயுள்ள துறைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை(47) ஆகியோருடன் ஒரு மொபெட்டில் உளுந்தூர்பேட்டையிலிருந்து பண்ருட்டியை நோக்கி வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த கெடிலம் அருகே சென்றபோது, மொபெட் மீது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மொன்னையன் உள்ளிட்ட 3 பேரும் ஆம்புலன்ஸ் உதவியுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மொன்னையன், அண்ணாமலை ஆகிய இருவரும் அன்றிரவு உயிரிழந்தனர். திருநாவலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.