மணல் கடத்தல்: இருவர் கைது

மணல் கடத்தல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

மணல் கடத்தல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
 பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை காவல் சரகப் பகுதியில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பணிக்கன்குப்பம் சிலுவைராஜ் என்பவரது நிலத்தின் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை உதவி ஆய்வாளர் எம்.பாஸ்கர் பறிமுதல் செய்தார்.
 மேலும் அதை ஓட்டி வந்த பண்ருட்டி சீலக்காரத் தெருவைச் சேர்ந்த சக்திவேல் (52) என்பவரை கைது செய்தார். இதேபோல, கெடிலம் ஆற்றின் அருகே மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர் பண்ருட்டி கம்பர் தெருவைச் சேர்ந்த செந்தில் (36) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com