குடிநீர்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து, விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம் வட்டம், குப்பநத்தம் புதிய காலனியில் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பாலகிருஷ்ணன் என்பவரது தலைமையில் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், தங்களது கோரிக்கைகளை அலுவலகத்தில் மனுவாக அளித்தனர்.