தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9.71 லட்சம்

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.9 லட்சத்து 71 ஆயிரம் கிடைத்துள்ளது.

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.9 லட்சத்து 71 ஆயிரம் கிடைத்துள்ளது.
 இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் ஜே.ராஜசரவணக்குமார், ஆய்வாளர் ப.சீனுவாசன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் வாசு, ராஜ்குமார், முத்துக்குமரன், ராமலிங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 9 லட்சத்து 71ஆயிரத்து 366 ரூபாய் கிடைத்தது. மேலும் தங்கம் 31 கிராம், வெள்ளி 128 கிராம், வெளிநாட்டு பணம் கத்தார் ரியால் -12, மலேசியா ரிங்கட்-138, சிங்கப்பூர் டாலர்-5, அமெரிக்க டாலர்- 11, யூரோ டாலர்- 125, சவூதி ரியால்- 11 உள்ளிட்டவை இருந்தன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com