பண்ருட்டி, திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை சிவன், அம்பாள், நந்திதேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக -ஆராதனை நடைபெற்றது. பின்னர், நந்திதேவருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப் பெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத் தொடர்ந்து, சிவபெருமானும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு சென்றனர். நிகழ்வில் திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.