கள் இறக்கிய 3 பேர் கைது

காடாம்புலியூர் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

காடாம்புலியூர் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காடாம்புலியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடேசன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். அப்போது, புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் விநாயகமூர்த்தி (45), காணங்குப்பத்தைச் சேர்ந்த ஞானசேகர் மகன் ஞானவேல் (32), பெரியபுறங்கணி கிராமத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் மகன் கருணாகரன் (27) ஆகியோர் தங்களது நிலத்தில் உள்ள பனை மரத்திலிருந்து கள் இறக்கியது தெரியவந்ததாம். இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com