படகில் மது கடத்தியவர் கைது

படகில் மது கடத்தியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

படகில் மது கடத்தியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் உத்தரவுபடி, தனிப்படையினர் வியாழக்கிழமை கடலூர்-புதுச்சேரி மாநில எல்லையான கும்தாமேடு சோதனைச் சாவடி அருகே பெண்ணையாற்று பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, பெண்ணையாற்றில் வந்த  படகை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அதில், புதுவை மாநில மதுபான  புட்டிகள் 75 இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, படகை ஓட்டி வந்த கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த கலைவாணன் மகன் ரூபனை (19) கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய படகு பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com