விருத்தாசலத்தில் ரயில்வே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ரயில்வே திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு நிலைய மேலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இந்தக் கருத்தரங்கில் திருச்சி கோட்டப் போக்குவரத்து மேலாளர் மது சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, விரைவு ரயில்களில் பாதுகாப்பாகப் பணிகளை மேற்கொள்வது, சிவப்பு, பச்சை வண்ணக் கொடிகளைக் காட்டு விதம், சிக்னல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.
கருத்தரங்கில் திருச்சி கோட்ட ஆய்வாளர் திலீப் வெனாள்டன், விருத்தாசலம் ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ராஜாராமன், விழுப்புரம் ரயில் போக்குவரத்துப் பள்ளி பயிற்றுநர் சிவக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விருத்தாசலம் ரயில் நிலைய ரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.